தொட்டனைத் தூறும்
[எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியின் வலைமலர்]
சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்
படி;படை;பயன்படு
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் முறைகள் 12
பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் முறைகள் 12 !
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
1.அருந்துதல்
-
மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2.உண்ணல்
-
பசிதீர உட்கொள்ளல்.
3.உறிஞ்சல்
-
வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4.குடித்தல்
-
நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5.தின்றல்
-
தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6.துய்த்தல்
-
சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7.நக்கல்
-
நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8.நுங்கல்
-
முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9.பருகல்
-
நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10.மாந்தல்
-
பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11.மெல்லல்
-
கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12.விழுங்கல்
-
பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக