அன்புள்ள அன்னை
என் உயிருக்கு உடல் கொடுத்து
உடலுக்கு உயிர் கொடுத்து
வாழ்வை வடிவமைத்தீர்.
என் எதிர்காலம் செம்மையுற
தன் காலத்தில் பெரும்பங்கைத்
தானம் தந்தீர்.
இருதிரி கொண்ட
மெழுகுத் திரியாய்
உமை மாற்றிக் கொண்டீர்.
கல்வியில் கைகொடுத்து
அறத்தைக் கற்பித்து
மனிதநேயம் வளர்த்தீர்.
தோல்வியில் தேறுதலாகி
வெற்றியின் ஒருகூறாகி
வெளிச்சம் தந்தீர்.
என் விருப்பமே தன் விருப்பமாகி
எனக்குள் வாழ்கிறார் என் தாய்
அவருக்குள் வாழ்கிறேன் நான்.
என் உயிருக்கு உடல் கொடுத்து
உடலுக்கு உயிர் கொடுத்து
வாழ்வை வடிவமைத்தீர்.
என் எதிர்காலம் செம்மையுற
தன் காலத்தில் பெரும்பங்கைத்
தானம் தந்தீர்.
இருதிரி கொண்ட
மெழுகுத் திரியாய்
உமை மாற்றிக் கொண்டீர்.
கல்வியில் கைகொடுத்து
அறத்தைக் கற்பித்து
மனிதநேயம் வளர்த்தீர்.
தோல்வியில் தேறுதலாகி
வெற்றியின் ஒருகூறாகி
வெளிச்சம் தந்தீர்.
என் விருப்பமே தன் விருப்பமாகி
எனக்குள் வாழ்கிறார் என் தாய்
அவருக்குள் வாழ்கிறேன் நான்.
ஆ. ஏஞ்சலின் பிரியதர்ஷினி 12 அ