ஆய கலைகள் அறுபத்துநான்கு
ஆய கலைகள் அறுபத்து நான்கையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை
என்றார் குமரகுருபரர் .அறுபத்துநான்கு கலைகளின்
பட்டியல் இதோ .
1.ஆடல்
2.இசைக்கருவி மீட்டல்
3.ஒப்பனை செய்தல்
4.சிற்பம் வடித்தல்
5.பூத்தொடுத்தல்
6.சூதாடல்
7.சுரதம் அறிதல்
8.தேனும் கள்ளும் சேகரித்தல்
9.நரம்பு மருத்துவம்
10.சமைத்தல்
11.கனி உற்பத்தி செய்தல்
12.கல்லும் பொன்னும் பிளத்தல்
13.கரும்பில் வெல்லம் எடுத்தல்
14.உலோகங்களில் மூலிகை கலத்தல்
15.கலவை உலோகம் பிரித்தல்
16.உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17.உப்பு உண்டாக்குதல்
18.வாள் எறிதல்
19.மற்போர் புரிதல்
20.அம்பு தொடுத்தல்
21படை அணிவகுத்தல்
22.முப்படைகளை முறைப்படுத்தல்
23.தெய்வங்களை மகிழ்வித்தல்
24.தேரோட்டல்
25.மட்கலம் செய்தல்
26.மரக்கலம் செய்தல்
27.பொற்கலம் செய்தல்
28.வெள்ளிக்கலம் செய்தல்
29.ஓவியம் வரைதல்
30.நிலச்சமன் செய்தல்
31.காலக் கருவி செய்தல்
32.ஆடைக்கு நிறமூட்டல்
33.எந்திரம் இயற்றல்
34.தோணி கட்டல்
35.நூல் நூற்றல்
36.ஆடை நெய்தல்
37.சாணை பிடித்தல்
38.பொன்னின் மாற்று அறிதல்
39.செயற்கைப் பொன் செய்தல்
40.பொன்னாபரணம் செய்தல்
41.பொன் முலாமிடுதல்
42.தோல் பதனிடுதல்
43.மிருகத் தோல் உரித்தல்
44.பால் கறந்து நெய்யுறுக்கல்
45.தையல்
46.நீச்சல்
47.இல்லத் தூய்மையுறுத்தல்
48.துவைத்தல்
49.மயிர் களைதல்
50.எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல்
51.உழுதல்
52.மரம் ஏ றுதல்
53.பணிவிடை செய்தல்
54.மூங்கில் முடைதல்
55.பாத்திரம் வார்த்தல்
56.நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
57.இரும்பாயுதம் செய்தல்
58.மிருக வாகனங்களுக்கு தவிசு அமைத்தல்
59.குழந்தை வளர்ப்பு
60.தவறினைத் தண்டித்தல்
61.பிறமொழி எழுத்தறிவு
62.வெற்றிலைப் பாக்கு சித்தப்படுத்துதல்
63.மே ற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64.வெளிப்படுத்தும் நிதானம் .
[ இவை சுக்கிர நீதி கூறும் அறுபத்து நான்கு கலைகள் ஆகும் ]