சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

சனி, 4 டிசம்பர், 2010

'விரும்பு'

  'விரும்பு' முன்னேற்ற வாழ்வின் அடிக்கரும்பு

 மாணவக் கண்மணிகளே! பள்ளி வாழ்வில், நீங்கள் படித்த வரி ஔவைப் பாட்டியின் 'அறம் செய விரும்பு'. ஏன் விரும்ப வேண்டும்? விரும்புவதை, நம்  உடலில் உள்ள நரம்புகள் மூளைக்கு எடுத்து செல்கின்றன. மூளை அச்செய்திகளை நிறைவேற்ற புலன்களை, மூளை எனும் பேழையில் நாம் 
சேகரித்துள்ள அறிவைப் பயன்படுத்துகிறது. இப்படி நாம்  விரும்புவது நடைபெறுகிறது. நாம் விரும்பாத செயல்கள் நடைபெறுவதில்லை. ஏன்?
நமக்கு அறுவை சிகிச்சையின்போது, நமக்கு வலி தெரியாமல் இருக்க,மூளைக்கு செய்திகள் அனுப்பும் நரம்பின் மீது மருந்தை செலுத்துகிறார்கள்.
அதனால் மூளைக்குச் செய்திகள் அறுவை சிகிச்சை செய்யும் பகுதியிலிருந்து வருவதில்லை. அதனால் வலியை நாம் உணர்வதில்லை.
(தகவல் சுஜாதா.தலைமைச்செயலகம்)  இதே போல் நாம் விரும்பாத செய்திகள் நம் மூளையை எட்டுவதில்லை. மாணவர்களே! படிப்பது எனக்குப் பிடிக்காது,கடினமானது என்றெல்லாம் சொல்லாதீர்கள். அந்த எண்ணங்கள் உங்கள் மூளையில் படிந்து படிக்க முடியாமல் போய் விடும். அதனால் படிப்பதை விரும்பு . வாழ்கை இனிக்கும் கரும்பாக மாறும்.

நன்றி
திருமதி.சௌமியா,
தமிழ்த்துறை.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக