சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வெள்ளி, 26 நவம்பர், 2010

கவிதைகள்

கவிதைகள்
தாத்தா
தாத்தா நீங்கள் ஓர் அற்புத பிறவி
"தா,தா" என்று கேட்ட போது வாரி வாரி வழங்கினீர்
அம்மா திட்டியபோது என்னைச் செல்லமாக வருடினீர்
குழந்தையாய் இருந்த போது என் புன்சிரிப்பை ரசித்தீர்
தூக்கம் வந்தபோது குட்டிக் கதை ஒன்று கூறினீர்
பயம் கவ்விக்கொண்ட போது கடவுளைக் காட்டினீர்
அன்பான புன்னகையை உங்களிடம் கண்டேன்
அளவில்லா பாசத்தை உங்களிடம் கண்டேன்
அசையாத நம்பிக்கையை உங்களிடம் கண்டேன்
அப்பாவின் மறு உருவத்தை உங்களிடம் கண்டேன்
நீங்கள் ஒரு சொக்கத்தங்கம்; எனக்குக் கடவுள் தந்த அற்புத பரிசு

பூ
மல்லிகைப்பூ
தாமரைப்பூ
ரோஜாப்பூ
அன்பு
பண்பு
நட்பு
என்ற பல பூக்கள் இப்புவியில் குவிந்து கிடந்தாலும்
பலரிடையே சிரிப்பு என்னும் பூ மட்டும் காணவில்லை ...

மரம்
கண்ணிற்குக் குளிர்ச்சியூட்டும் பசுமையைத் தந்தாய்
நாவிற்குச் சுவைதரும் கனிகளைத் தந்தாய்
சுவாசத்திற்கு இன்றியமையாத காற்றைத் தந்தாய்
தேகத்திற்கு இதமான நிழலைத் தந்தாய்
மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் பூக்களைத் தந்தாய்
மருத்துவ குணம் நிறைந்த இலைகளைத் தந்தாய்
ஆனால், ஈவிரக்கமில்லா மனிதனோ உனக்கு அழிவைத் தான் தந்தான்...
மழை
மேகப்புற்றின் கண்ணீராய் நீ பிறந்தாய்
மலைகளோடு உறவாடி அருவியாய் நீ தவழ்ந்தாய்
நதிகளின் நாயகனாய் நீ ஓடி விளையாடினாய்
காற்றோடு கைகோர்த்து நீ மழலைக் கூச்சல் போட்டாய்
தாகத்தைத் தணிக்கும் தண்ணீரை நீ வழங்கினாய்
கருணையோடு விவசாயத்திற்கு சேவைகள் பல ஆற்றினாய்
மரம், செடி, கொடிகளின் அருமை தோழனாய் நீ திகழ்ந்தாய்
நெடுதூர பயணத்தின் பின் கடலோடு ஒன்றினாய்
ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் மட்டும் புவிக்கு வர மறுக்கிறாய்...
கைத்தொலைப்பேசி
நானோ உனக்கு சார்ஜ் செய்து உயிர் கொடுத்தேன்
நீயோ கதிர்வீச்சால் என் உயிரை பறித்துவிட்டாய்...

.வை. மனிஷா
10 - ஜே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக