எடுத்துச் சொல்ல எவருமின்றி
எழுந்து நடந்தவன் யாரிங்கே ?
அகரம் பழக்கும் கைகளின்றேல்
ஆயுதம் முளைக்கும் பாரிங்கே
கருவறை கழிந்து வகுப்பறை பயின்ற
ஒருவரை உலகம் மதிக்கும் --சொல்லிக்
கொடுப்பவர் என்ற துடுப்புகள் இன்றேல்
தலைமுறை எப்படிச் சிறக்கும்.
ஆயுதம் தொடங்கி காகிதம் வரைக்கும்
செய்கின்ற வேலை எதற்கும் -ஓர்
ஆசான் இன்றேல் ஆக்கங்கள் இல்லை
என்பதை உலகம் உரைக்கும்
எழுத்தறி வித்தே எழுத்தறி வித்தே
உலர்ந்து போன மையா ?-நீங்கள்
எழுத்தறி விக்காமல் நாங்கள் வந்தோம்
என்ப தென்ன மெய்யா?
அரசன் என்றாலும் அரிசன் என்றாலும்
சமநீதி உங்கள் சபையில் !-எந்த
வர்க்க மூலத்தையும் சரிசம மாக்கும்
சமநீதி உங்கள் கையில் !
வகுப்பு வாதமும் வகுப்பு பேதமும்
வந்து குவிகின்ற நாட்டில் ! -உங்கள்
வகுப்பு வாதமும் இலாத பேதமும்
வகுத்துக் காட்டியது வாழ்க்கை
கத்தி கொண்டே காயம் ஆற்றும்
மருத்துவன் வேலை அய்யா !-நீங்கள்
கத்திக் கொண்டே புத்தி புகட்டி
கண்களைத் திறந்தது பொய்யா ?
வன்முறை தொலைத்து நன்முறை பிறக்க
வாத்தியார் அய்யா வேண்டும்
எழுத்தறி வித்த இறைவா உங்கள்
பழுத்தறிவு என்றும் வேண்டும் !
எழுந்து நடந்தவன் யாரிங்கே ?
அகரம் பழக்கும் கைகளின்றேல்
ஆயுதம் முளைக்கும் பாரிங்கே
கருவறை கழிந்து வகுப்பறை பயின்ற
ஒருவரை உலகம் மதிக்கும் --சொல்லிக்
கொடுப்பவர் என்ற துடுப்புகள் இன்றேல்
தலைமுறை எப்படிச் சிறக்கும்.
ஆயுதம் தொடங்கி காகிதம் வரைக்கும்
செய்கின்ற வேலை எதற்கும் -ஓர்
ஆசான் இன்றேல் ஆக்கங்கள் இல்லை
என்பதை உலகம் உரைக்கும்
எழுத்தறி வித்தே எழுத்தறி வித்தே
உலர்ந்து போன மையா ?-நீங்கள்
எழுத்தறி விக்காமல் நாங்கள் வந்தோம்
என்ப தென்ன மெய்யா?
அரசன் என்றாலும் அரிசன் என்றாலும்
சமநீதி உங்கள் சபையில் !-எந்த
வர்க்க மூலத்தையும் சரிசம மாக்கும்
சமநீதி உங்கள் கையில் !
வகுப்பு வாதமும் வகுப்பு பேதமும்
வந்து குவிகின்ற நாட்டில் ! -உங்கள்
வகுப்பு வாதமும் இலாத பேதமும்
வகுத்துக் காட்டியது வாழ்க்கை
கத்தி கொண்டே காயம் ஆற்றும்
மருத்துவன் வேலை அய்யா !-நீங்கள்
கத்திக் கொண்டே புத்தி புகட்டி
கண்களைத் திறந்தது பொய்யா ?
வன்முறை தொலைத்து நன்முறை பிறக்க
வாத்தியார் அய்யா வேண்டும்
எழுத்தறி வித்த இறைவா உங்கள்
பழுத்தறிவு என்றும் வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக