சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

சனி, 11 மே, 2013

                     புத்தகம் என்பது 

கவிஞர்  ஈரோடு தமிழன்பன் இருபத்தோராம் நூற்றாண்டு 
வள்ளலார் .அவருடைய ' புத்தகம் என்பது...  'என்ற நூலில் 
இடம்பெற்ற, சில கவிதைகளை உங்கள் பார்வைக்குப் 
பரிமாறுகிறோம் .

"பத்துப்
 பறவைகளோடு பழகி 
 நீங்கள்
 ஒரு பறவையாக முடியாது .
 
 பத்து
 நதிகளோடு பழகி 
 நீங்கள்
 ஒரு நதியாக முடியாது.
 
 பத்துப் 
 புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
 நீங்கள்  
 பதினோராவது புத்தகமாகி 
 படிக்கப்படுவீர்கள் ".
 
" புத்தகங்களைத் 
  திற; 
 அவை உன்னைத் 
 திறக்கும் ."

 "சிறந்த புத்தகத்தின் 
 பயன் மனப்பாடம் ஆவதன்று .
 மனத்துக்குப் 
 பாடமாவதுதான்"    
 
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக