புத்தகம் என்பது
கவிஞர் ஈரோடு தமிழன்பன் இருபத்தோராம் நூற்றாண்டு
வள்ளலார் .அவருடைய ' புத்தகம் என்பது... 'என்ற நூலில்
இடம்பெற்ற, சில கவிதைகளை உங்கள் பார்வைக்குப்
பரிமாறுகிறோம் .
"பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது .
பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது.
பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகி
படிக்கப்படுவீர்கள் ".
" புத்தகங்களைத்
திற;
அவை உன்னைத்
திறக்கும் ."
"சிறந்த புத்தகத்தின்
பயன் மனப்பாடம் ஆவதன்று .
மனத்துக்குப்
பாடமாவதுதான்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக